தமிழ்த் தேசியப் போராளி புலவர் கு. கலியபெருமாள் அவர்களின் இணையர் வாலாம்பாள் அவர்களின் 5ஆம் ஆண்டு வீரவணக்க நாள் நிகழ்வு!
தமிழ்த் தேசியப் போராளி புலவர் கு. கலியபெருமாள் அவர்களின் இணையர் வாலாம்பாள் அவர்களின் 5ஆம் ஆண்டு வீரவணக்க நாள் தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில், நேற்று (06.10.2014) கடைபிடிக்கப்பட்டது.
நேற்று மாலை 5 மணியளவில், பெண்ணாடம் சவுந்திர சோழபுரம் தென்னஞ்சோலை செங்களத்தில் அமைந்துள்ள அம்மையாரது நினைவிடத்தில், தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க.முருகன் தலைமையில், பொதுக்குழு உறுப்பினர் தோழர் அர.கனகசபை, கிளைச் செயலாளர் தோழர் கு.மாசிலாமணி, தமிழக இளைஞர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் தோழர் சி.பிரகாசு, தமிழக மாணவர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் தோழர் மா.மணிமாறன் உள்ளிட்ட த.தே.பேரியக்கத் தோழர்களும், ஆசிரியர் மு.பழனிவேலு, தமிழர் நீதிக்கட்சித் தோழர் கதிர்வேலு, தோழர் சோழ நம்பியார் உள்ளிட்ட பல்வேறு தமிழின உணர்வாளர்களும் இதில் கலந்து கொண்டனர்.
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/ Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam


0 Comments