கதிராமங்கலத்தில் மக்களைக் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கியக் காவல்துறையினரைக் கண்டித்தும், சிறையிலுள்ள போராளிகளை விடுதலை செய்யக் கோரியும், மதுரையில் நாளை (12.07.2017) தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் தெருமுனைக் கூட்டம் நடைபெறுகின்றது.
மதுரை - செல்லூர் அறுபது அடி சாலையிலுள்ள கண்ணையா முத்தம்மாள் அரங்கில் மாலை 6 மணியளவில் நடைபெறும் இக்கூட்டத்திற்கு, மதுரை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சு. அருணாச்சலம் தலைமை தாங்குகிறார். பல்வேறு அமைப்பினரும் தமிழின உணர்வாளர்களும் பங்கேற்கவுள்ளனர்.
கதிராமங்கலத்தைக் காப்பதற்கான போராட்டம், அதோடு நின்று விடாமல், ஒட்டுமொத்தக் காவிரிப்படுகையையும் காப்பதற்கான போராட்டமாக விரிவடைய வேண்டும்.
எனவே, தமிழின உணர்வாளர்களும் சனநாயக ஆற்றல்களும் போராட்டத்தில் திரளாகப் பங்கேற்க வேண்டுமென அன்புரிமையுடன் அழைப்பு விடுக்கின்றோம்!
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com

0 Comments