தஞ்சையில் நாளை (02.01.2018) தமிழக ஆளுநருக்குக் கருப்புக்கொடி!
காவிரியில் நீரின்றி பயிர்கள் காய்ந்து கிடக்கும் நிலையில், கர்நாடகத்திடம் பேசி காவிரி நீரைப் பெற்றுத் தர முன் வராத தமிழக ஆளுநர், “ஆய்வு” என்ற பெயரில் தமிழ்நாட்டு நிர்வாகத்தில் தலையிட்டு வருகின்றார்.
அவ்வகையில், நாளை (02.01.2018) தஞ்சைக்கு வரும் தமிழக ஆளுநருக்குக் கருப்புக் கொடி காட்டும் ஆர்ப்பாட்டத்தை காவிரி உரிமை மீட்புக் குழு நடத்துகின்றது!
தமிழ் மக்களே! உழவர்களே! வாருங்கள்!
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
பேச: 98419 49462, 94432 74002
Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery

0 Comments