வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு எதிராகக் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. அவர்களுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் வீரவணக்கம்!
வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு எதிராகக் கப்பலோட்டிய வீரத்தமிழர் வ.உ. சிதம்பரனார் அவர்களின் 146ஆவது பிறந்தநாளையொட்டி, திருச்சியில் இன்று (05.09.2018) வ.உ.சி. திருவுருவச் சிலைக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் மாலை அணிவித்து வணக்கம் செலுத்தப்பட்டது.
 
தமிழ்த்தேசியப் பேரியக்கத் திருச்சி மாநகரச் செயலாளர் தோழர் மூ.த. கவித்துவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர்கள் இனியன், வெள்ளம்மாள், பொறியாளர் முத்துக்குமாரசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 
வீரத்தமிழர் வ.உ.சி. அவர்களுக்கு வீரவணக்கங்கள்!
 
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
 
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhthesiyam.com